நூதனமான முறையில் தங்கம் கடத்தல்- 4 பேர் கைது.

by Editor / 14-10-2022 08:55:19pm
நூதனமான முறையில் தங்கம் கடத்தல்- 4 பேர் கைது.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணி ஒருவர், தனது இடுப்பு பெல்ட்டில்சுமார் 10 கிலோ  எடை கொண்ட தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திய போது, இந்த தங்கத்தை துபாய் விமான நிலையத்தில் 2 சூடான் நாட்டவர்களிடம் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளார். இதுதவிர மேலும் 4 பயணிகளிடம் இருந்து உள்ளாடைகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via