நெல்லை மழை பாதிப்புகளை உதநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்
நெல்லை மாவட்ட மழை வெள்ள மீட்பு பணிக்கு நியமிக்கப்பட்ட கூடுதல் அமைச்சர்களில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளார். எனவே அவர் நேற்று மாலை நெல்லை வருகை தந்து மாநகரில் வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் ஆய்வு செய்தார். பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் உள்ள முகாமில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டார். பின்னர் நெல்லை சந்திப்பில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கினார்.
Tags :