மெரினா கடற்கரையில் சுற்றித்திரியும் கடல் டிரகன்கள்
சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பிறகு, ஆழ்கடல் உயிரினங்கள் மெரினா கடற்கரை பகுதிகளில் வலம்வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நீல கடல் டிராகன் (கிளாக்கஸ் அட்லாண்டிகஸ்), மற்றும் ப்ளூ பட்டன் (போர்பிட்டா போர்பிட்டா) என்ற இரண்டு உயிரினங்கள் கரை பகுதியில் இறந்தும் உயிருடனும் சுற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி இந்த வகை உயிரினங்கள் விஷத்தன்மை உடைவையாகவும் மனிதர்களிடம் இருந்து விலகி இருப்பவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷம் மிகவும் ஆபத்தானவை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :