மாமியாரை கொலை செய்து சென்னைக்கு தப்பிய நபர் 28 ஆண்டுகளுக்குப்பின்னர் கைது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஹர பட்டா ஜோஷி 1993ல் சென்னைக்கு வேலை தேடி வந்த இவர் 1994 இந்திரா என்ற பெண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகளில் விவாகரத்து வரை சென்று அதன் பிறகு நடந்த தகராறில் (1995) மாமியாரை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். போலீசார் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சில வாரங்களுக்கு முன் தலைமறைவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தனிப்படையுடன் சென்ற மடிப்பாக்கம் காவலர்கள் ஒடிசா மாநில காவல்துறை உதவியுடன் வேறு ஒரு திருமணம் செய்து வாழ்ந்துவந்த அவரை 28 ஆண்டுகள் கழித்து பிடித்து சிறையில் அடைத்தனர்.
Tags : மாமியாரை கொலை செய்து தப்பியோடிய நபர் 28 ஆண்டுகளுக்குப்பின்னர் கைது.