புரோட்டா சாப்பிட ஹோட்டலுக்கு வரும் காளை மாடு

by Editor / 01-08-2021 04:01:15pm
புரோட்டா சாப்பிட ஹோட்டலுக்கு வரும் காளை மாடு

மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்காவிற்குட்பட்ட பெருங்குடி பகுதியிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் தனியார் ஹோட்டல் நடத்தி வருபவர் முருகேசன். கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது ஹோட்டலுக்கு பெருங்குடி முத்தையா கோவில் காளை ஹோட்டல் முன் நின்று கொண்டிருந்தது. கோவில் காளை ஹோட்டல் முன் நின்று கொண்டிருப்பதை கண்ட உரிமையாளர் காளை மாட்டிற்கு புரோட்டா மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை உணவாக கொடுத்துள்ளார்.

அதை உண்டு அங்கிருந்து சென்ற கோவில் காளை இந்த செயலை வாடிக்கையாக வைத்துள்ளது., தினசரி அங்கு வந்து ஹேட்டலுக்கு முன் நின்று கொண்டு உரிமையாளர் தமக்கு புரோட்டா தரும் வரை இடத்தைவிட்டு அசையாமல் காத்திருக்கிறது.தினந்தோறும் கோவில் காளை மாடு வருவதை புரிந்துகொண்ட ஹேட்டல் உரிமையாளர் முருகேசன் நாள்தோறும் மீதம் உள்ள புரோட்டாகளை காளைக்கு கொடுத்து வந்தார். அதை உண்ட கோவில் காளை அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடிக்க சென்று விடும்.

 

Tags :

Share via