இரண்டு லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் 40 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

by Editor / 24-12-2022 10:04:22am
 இரண்டு லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் 40 நிமிடத்தில் விற்று  தீர்ந்தன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் இரண்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி நடைபெற உள்ளது.வைகுண்ட ஏகாதசிக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் நாள் ஒன்றுக்கு 20000 டிக்கெட்டுகள் 11 நாட்களுக்கு இரண்டு லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்றே வெளியிடப்பட்டன.முன்பதிவு தொடங்கி 40 நிமிடங்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் பக்கங்கள் முன்பதிவு செய்து கொண்டனர்.இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆறு கோடியே ஆறு லட்ச ரூபாய் வருமானம் 40 நிமிடத்தில் கிடைத்துள்ளது.டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் கொரோனா பரவலின் காரணமாக இரண்டு , டோஸ் தடுப்பூசி சான்றிதழை காண்பித்து தரிசனத்துக்கு செல்லுமாறு தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் நேரடியாக வெறும் 31ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via