அனல் மின்நிலைய ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது
திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பிரசாத் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பாலகண்ணன் கொலை தொடர்பாக.திருச்செந்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் சுடலைமணி (19), திருச்செந்தூரை சேர்ந்த பாலமுருகன் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருச்செந்தூரை சேர்ந்த புறா ராஜா, சுரேஷ்கோபி, தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேசு ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.இதற்கிடையே திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ஜெ. ஜெ. நகர் அருகே காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட பாலகண்ணனின் உடலை நேற்று தாசில்தார் வாமனன் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். பின்னர் அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் உதயகுமார் தலைமையிலான குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பாலகண்ணனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags :