சிவகங்கை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து 6 பயணிகள் காயம்

by Editor / 14-08-2022 04:01:12pm
சிவகங்கை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து 6 பயணிகள் காயம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 36 பயணிகள் காயமடைந்தனர். புதுக்கோட்டையில் இருந்து திருப்பத்தூர் வழியாக 36 பயணிகளுடன் மதுரை நோக்கி தனியார் பேருந்து தேவகோட்டையில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இரு பேருந்துகளும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்தபோது புறப்படும் நேரம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் தனியார் பேருந்து வேகமாக வருவதை கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை நடுரோட்டில் நிறுத்தியதாக கூறப்படுகிறது .இதனால் அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அரசு பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார் .மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருடன் இணைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via