சிறுமி பலாத்காரம் செய்து கர்ப்பம்; 24 வயது நபர் கைது

by Staff / 03-01-2024 01:52:17pm
சிறுமி பலாத்காரம் செய்து கர்ப்பம்; 24 வயது நபர் கைது

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் கத்திப்பாரா செம்பரகுண்டாவை சேர்ந்த மிஷாப் ஷான் (24) போலீசாரால் கைது செய்யப்பட்டார். தாமரச்சேரி போலீசார் நேற்று செம்ப்ரகுண்டாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மிஷாப் ஷனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. 17 வயதுடைய சிறுமி கத்திப்பாராவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, பின்னர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via