சிறுத்தை தாக்கியதில் இருவர் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

by Staff / 07-01-2024 03:16:45pm
சிறுத்தை தாக்கியதில் இருவர் பலி -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நிவாரணம் அறிவிப்பு

நீலகிரி மாவட்ட கூடலூர், பந்தலூர் பகுதியில் மலைத்தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. இதற்கு முன்னதாக பெண்கள் இருவர் சிறுத்தையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர்.  கோவை மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண் உயிரிழந்ததைஅடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு..க..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via