கொரோனா பரிசோதனை -அபராதம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

by Editor / 11-01-2022 10:05:27am
கொரோனா பரிசோதனை -அபராதம்  சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அதன்படி முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அடிக்கடி சோப்பு போட்டு பொதுமக்கள் தங்களது கைகளை கழுவ வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சாலைகளில்  இருசக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களை வளைத்து..வளைத்து காவல்துறையும்,சுகாதாரத்துறையும் பிடித்து அபதாரம் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யும் பணிகளை செய்துவருகின்றனர்.இந்த அதிரடி சோதனைகளால் அதிர்ச்சி அடைந்த முக கவசம் அணியாமல் வந்த பலர் அ்ங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இருப்பினும் அவர்களையும் சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்களிடம், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது பற்றியும், அதை தடுக்க முக கவசம் அணியவேண்டிதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.இருப்பினும் முக கவசம் அணியாமல் மக்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றி கொள்ளும் அவலம் உருவாகியுள்ளது.

கொரோனா பரிசோதனை -அபராதம்  சுகாதாரத்துறையினர் நடவடிக்கை
 

Tags :

Share via