கேரளா சென்றடைந்தார் பிரதமர் மோடி
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரும் தங்களது குடும்பங்களை இழந்து வாடி வருகின்றனர். வயநாட்டுக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மோடி கேரளா சென்றடைந்தார். அவரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது, கேரளா ஆளுநர் ஆரிப் முகமது, முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் உடன் இருப்பார்கள்.
Tags :