தென்காசி மாவட்டத்தில் அதிகரிக்கும் கஞ்சா,மது,புகையிலை விற்பனை-கள்ளநோட்டு புழக்கம்.4 பேர் கைது

by Editor / 10-10-2022 12:05:20pm
தென்காசி மாவட்டத்தில்  அதிகரிக்கும் கஞ்சா,மது,புகையிலை விற்பனை-கள்ளநோட்டு புழக்கம்.4 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகர்க் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் வழிக்காட்டுதல் படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.மேலும் தென்காசி மாவட்ட காவல் துறையினரும் இதுகுறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் செங்கோட்டை மற்றும் தென்காசி புதிய பேரூந்து நிலையப் பகுதியில் போலீசார் திடீர் ஆய்வுகள் மேற்கொண்ட பொழுது தென்காசி உடையார் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் மணி செல்வம் மற்றும் செங்கோட்டை பெரிய பிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இரண்டு நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர் அவர்களது வாகனத்தில் போலீசார் சோதனை செய்தபோது அதில் நான்கு கிலோ கஞ்சாவும் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் கட்டுக்கட்டாக வைத்து இருப்பது கண்டறியப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதனை தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு புழக்கத்தில் விடுவதற்கும், கஞ்சா மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் வாங்கி வந்ததாக தெரிவித்தனர் இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று  செங்கோட்டைப் பகுதியில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட ரூபாய்2.25 இலட்சத்தை  பதுக்கி வைத்திருந்த  தெற்குமேடுபகுதியை சேர்ந்த பிரகலாதன்,விசுவநாத புரத்தை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 2நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்..தென்காசி மாவட்டத்தில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை முனைப்புடன் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via