மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்த இலங்கை கடற் கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து கடலுக்கு படகில் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் வழிமறித்து தாக்கி பொருட்களை பறித்து சென்றனர். இதில் காயம் அடைந்த பாஸ்கர், அருள்ராஜ் ஆகியோர் பலத்த காயத்துடன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.இந்த சம்பவம் குறித்து கடலோரக்காவல்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags : இலங்கை கடற் கொள்ளையர்கள்