பரமத்தி வேலூர் வாகன சோதனையில் ரூ.2.83 கோடி பறிமுதல்

by Editor / 13-04-2024 10:28:04am
பரமத்தி வேலூர் வாகன சோதனையில் ரூ.2.83 கோடி பறிமுதல்

 நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில், நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி அஸ்வின்குமார் தலைமையிலான குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது கரூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர், சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 கோடியை 83 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, ஏடிஎம் மையத்தில் வைப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாக காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து ரூ.2.83 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பரமத்திவேலுார் துணை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : பரமத்தி வேலூர் வாகன சோதனையில் ரூ.2.83 கோடி பறிமுதல்

Share via