பெரம்பலூரில் விபத்து: சுக்குநூறான பஸ் ஒருவர் பலி

by Staff / 07-01-2024 04:21:01pm
பெரம்பலூரில் விபத்து: சுக்குநூறான பஸ் ஒருவர் பலி

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்து, குஜராத்தில் இருந்து, ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை- திருச்சி, தேசிய நெடுஞ்சாலையில், செல்லும் போது பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே கொண்டக்கார பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது, ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.இதில் பேருந்தில் பயணம் செய்த, குஜராத் மாநிலம் மகிஷ்கர் மாவட்டம் லோபானியா பகுதியைச் சேர்ந்ததாமோர் நட்டு பாய் மகன் நட்டு பாய்-45 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆம்னி பேருந்தில் பயணம் செய்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த உஷா பேன் வயது 45 அல்பீஸ் வயது 27, ஆம்னி பேருந்து ஓட்டுனர்ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த பரத் வயது 37, ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர், தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் படு காயமடைந்தவர்களை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த தகவல் அறிந்த பாடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து ஏற்பட்ட வாகனத்தை அப்புறப்படுத்தி உயிரிழந்த நட்டு பாய் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து லாரி ஓட்டுநர் விழுப்புரம் மாவட்டம்,சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த ஹிலால் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via