பெண் மீது பாய்ந்த துப்பாக்கி தோட்டா - போலீஸ் விசாரணை

by Staff / 08-01-2024 12:06:59pm
பெண் மீது பாய்ந்த துப்பாக்கி தோட்டா - போலீஸ் விசாரணை

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சி முகாம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்களுக்கு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்த பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை இந்த பயிற்சி மையத்தில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த மோகன் மனைவி ஜெயலட்சுமி என்பவரின் உடலின் மீது துப்பாக்கி தோட்டா பட்டது. நல்வாய்ப்பாக, அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். செங்கல்பட்டு தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் சென்னேரி கிராமத்தை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via