மம்தா பானர்ஜியுடன் சிறந்த உறவு தொடரும் - ராகுல் காந்தி

by Staff / 24-01-2024 12:25:10pm
மம்தா பானர்ஜியுடன் சிறந்த உறவு தொடரும் - ராகுல் காந்தி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியுடன் கருத்து வேறுபாடு ஏதுமில்லாத உறவு தொடர்வதாகவும், 'இந்தியா' கூட்டணி குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக டிஎம்சி, காங்கிரஸ் இடையே மோதல் நிலவி வரும் சூழலில் ராகுலின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு விவாதத்தின் போது மம்தா பானர்ஜிக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் டிஎம்சி உறவை உடைக்க முடியாது என்று ராகுல் கூறினார்.

 

Tags :

Share via