பவதாரிணி மறைவு - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்
இளையராஜா மகளும் பாடகியுமான பவதாரிணி மறைவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயம் உங்களுடன் இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
Tags :