நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் -இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

by Admin / 02-02-2024 12:28:55pm
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் -இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சோதனை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரி விஸ்வநாதபுரி பகுதியைச் சார்ந்தவர் சந்திரன் என்பவர் மகன் மதிவாணன் இவர் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக அவரது வீடு அவரது ஸ்டுடியோ உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டு விட வண்ணம் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .மதிவாணன் வீட்டில் ஸ்டுடியோவிலும் சோதனை நடைபெறுவதை தொடர்ந்து ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் அங்கு குவிந்து வருகின்றனர்

.திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சட்டை யூடிப்டுப்பா் துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் என்ஐஏ சோதனை செய்து வருகிறது. சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. அதேபோல், இடும்பாவனம் கார்த்தி நேரில் ஆஜராக என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் -இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சோதனை
 

Tags :

Share via