சீனாவில்  மீண்டும்  ஊரடங்கு அமல்

by Editor / 03-08-2021 02:51:24pm
சீனாவில்  மீண்டும்  ஊரடங்கு அமல்



கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த தொற்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. அதிவேகமாக பரவி இந்த தொற்று காரணமாக பல உலக நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்திக்க தொடங்கின.

இதேபோல இந்தியாவும் கொரோனா தொற்று காரணமாக பல உயிரிழப்புகளை சந்தித்தது. ஒன்றரை ஆண்டுகளாக தொற்றின் தீவிரம் குறையாமல் உருமாறிக்கொண்டே இருந்தது. மேலும் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சீனாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via