நம்பிகோவில் சோதனைச்சாவடி தற்காலிகமாக அனுமதி நிறுத்தம்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் களக்காடு கோட்டம் திருக்குறுங்குடி வனச்சரகத்தில் நாளைமுதல் (20.02.24) வரும் (27.02.24) வரை மொத்தம் 8 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நம்பிகோவில் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்படுகிறது. திருக்குறுங்குடி வனச்சரக வன பகுதிகளுக்குள் புலிகள் கணக்கெடுப்பு காலங்களில் கோவில் வழிபாடு, சுற்றுலா போன்ற எந்த காரணங்களுக்காகவும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. மேற்குறிப்பிட்ட நாட்களில் தற்காலிகமாக அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் திருக்குருங்குடி வனச்சரகர் யோகேஸ்வரன் தகவல்.
Tags : நம்பிகோவில் சோதனைச்சாவடி தற்காலிகமாக அனுமதி நிறுத்தம்.