தமிழக வாழ்வுரிமை கட்சி பேரணி மற்றும் மாநாடுஒத்திவைப்பு.

by Editor / 19-02-2024 09:18:36am
தமிழக வாழ்வுரிமை கட்சி பேரணி மற்றும் மாநாடுஒத்திவைப்பு.

தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்ரவரி 28ஆம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகன் அறிவித்துள்ளார்.

 

Tags : ஒத்திவைப்பு.

Share via