இரட்டை குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகே பாலூரைச் சேர்ந்தவர் குருசாமி (36). மனைவி சசிகலா (32). தம்பதிக்கு, மோகன்பிரபு (9), மோகனதேவி (9), என இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். இருவரும், 4ஆம் வகுப்பு படித்து வந்தனர். வீட்டில் இருந்த இரு குழந்தைகளும், அருகேயுள்ள ஏரியில் அல்லிப் பூ பறிக்க சென்ற போது, ஏரியில் மூழ்கினர். நீண்ட நேரமாக குழந்தைகளைக் காணவில்லை என, உறவினர்கள் தேடியுள்ளனர். ஏரி பள்ளத்தில் நீர் கலங்கி இருந்ததால், அருகே இருந்தவர்கள் பள்ளத்தில் இறங்கி தேடினர். இரண்டு குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன. இச்சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
Tags :