திருநங்கையாக மாறிய நபர் கொலை தாய் உள்ளிட்ட 6 பேர் கைது.

by Editor / 19-12-2021 09:00:06pm
 திருநங்கையாக மாறிய நபர் கொலை  தாய் உள்ளிட்ட 6 பேர் கைது.


சேலம் ஜாகீர் அம்மாபாளையம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் உமாதேவி  கணவரை பிரிந்து தனது மகன் நவீன்குமாருடன் வசித்து வந்தார் . நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்ஷிதா என மாற்றிக்கொண்டார். கடந்த சிலமாதங்களுக்குமுன்னர் பெங்களூர் சென்று திருநங்கைகளுடன் வாழ்ந்துவந்த  அவர் கடந்த தீபாவளி பண்டிகையன்று வீடு திரும்பியுள்ளார். இதனிடையே கடந்த வாரம் சக்தி என்ற வாலிபருடன் வெளியூர்  சென்று விட்டு , நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.இந்த நிலையில் அவர் மறுநாள் பலத்த  காயத்துடன் , அம்மாபாளையம் காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி  நவீன்குமார் உயிரிழந்தார் .

இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில் அவரது  தாய் உமாதேவி நடவடிக்கைகளில் சந்தேகமடைந்தனர்.இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய ரகசிய விசாரணையில்  மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் தனக்கு தனக்குத் தெரிந்த நபர்கள் 5 பேரின் உதவியுடன் அவரை அடித்துக் கொன்றது விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து  நவீன்குமார் மர்மமரண வழக்கை  கொலை வழக்காக மாற்றி , தாய் உமாதேவி ,வெங்கடேஷ், காமராஜ்,கார்த்திகேயன், சந்தோஷ்,சிவக்குமார் ( 31 ) ஆகிய 6 பேரை போலீசார்  கைது செய்தனர்.


 

 

Tags :

Share via