கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் பலி

by Staff / 22-10-2023 12:01:52pm
கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் பலி

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில், நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் பலியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல், கபத்வாஞ்ச் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இதே போன்ற மேலும் 8 பலிகள் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.

 

Tags :

Share via