வாலிபருக்கு போக்சோ வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை

by Staff / 12-04-2023 04:41:49pm
 வாலிபருக்கு போக்சோ வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜ் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் பாரதி கணேஷ் (21), என்பவர் நத்தம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உடலுறவு கொண்ட குற்றத்திற்காக நத்தம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவ்வழக்கானது திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரி பாரதி கணேஷ் என்பவருக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது,

 

Tags :

Share via