ஈரோட்டில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து கொளுத்திய விவகாரம் இளைஞர் கைது

by Admin / 30-01-2022 04:13:28pm
ஈரோட்டில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து கொளுத்திய விவகாரம் இளைஞர் கைது

ஈரோட்டில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் பாட்டிலை வீசி எறிந்து தீயிட்டுக் கொளுத்தி விவகாரத்தில் ஒரு இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 22ஆம் தேதி கனி ராவுத்தர் குளம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை 2 மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

இதில் கடையில் இருந்த 44 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து நாசமான நிலையில் சம்பவம் குறித்த சிசிடி  காட்சிகள் வெளியானது.

 டாஸ்மாக் கடை ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் இருவரையும் தேடி வந்த வீரப்பன் சத்திரம் போலீசார் நேற்று சங்கர் என்ற இளைஞனை கைது செய்தனர்.

விசாரணையில் கடையை அடைக்கும் போது தான் மதுபானம் கேட்டதாகவும் கடை ஊழியர் மதுபாட்டில் தர மறுத்ததால் கோபத்தில் கடைக்கு தீ வைத்ததாகவும் சங்கர் கூறியுள்ளான்.

இதையடுத்து சங்கரை கைது செய்து போலீசார் மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்

 

Tags :

Share via