பிச்சை எடுத்த குழந்தைகள் மீட்பு

by Staff / 12-04-2023 04:27:50pm
பிச்சை எடுத்த குழந்தைகள் மீட்பு

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாலையோரம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுஅது தொடர்பாக மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துப்பாண்டி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மதுரை மாவட்ட குழந்தைகள் அலகு அளித்த பதில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுத்தி உள்ளது மதுரை மாவட்டத்தில் கடந்த 2018 ஆண்டு 4 குழந்தைகளும், 2020 ஆண்டு 15 குழந்தைகளும், 2021 ஆண்டு 38 குழந்தைகளும், 2022 ஆண்டு 56 குழந்தைகளும், என மொத்தம் 113 குழந்தைகள் மீட்கபட்டுள்ளதாகவும், மேலும் மதுரை மாநகர் பகுதியில் மட்டும் கடந்த 2018 முதல் 2022 வரை குழந்தையை கடத்தி விற்க முயன்றதாக 4 குழந்தைகள் மீட்கபட்டுள்ளதாகவும், அதேபோல் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 19 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via