இலங்கை அத்துமீறலை கண்டிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

by Editor / 05-07-2022 02:13:56pm
இலங்கை அத்துமீறலை கண்டிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன் துறைமுக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த கைது படலமும், அத்துமீறலும் நடந்திருக்கிறது. தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. மீனவர்களை கைது செய்ததற்காக இலங்கை அரசுக்கு மத்திய அரசுகண்டனம் தெரிவிக்க வேண்டும். இனி கைது கூடாது என்று இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via