காதலி வீட்டு முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர்

by Staff / 19-02-2024 11:55:43am
காதலி வீட்டு முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர்

கன்னியாகுமரி  மாவட்டம் நித்திரவிளை ஆற்றுபறுப்புப்புறத்தில் நேற்று வாலிபர் ஒரு வீட்டின் முன்பு, பெட்ரோலை தலையில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் உடல் முழுவதும் கருகிய நிலையில் வாலிபர் கீழே விழுந்தார். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் வாலிபர் புதுக்கடையை  சேர்ந்த முகேஷ் (25) என்று தெரிய வந்தது. அவர் தீக்குளித்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், நேற்று குடும்பத்துடன் சென்று பெண் கேட்டதாகவும், பெண் வீட்டார் மறுத்ததால் தீக்குளித்ததும் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via