காவல் நிலையத்தில் விஷம் குடித்த பெண்
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. தன்னை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி ஒரு பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகினார். அவர்கள் அவளுடைய புகாரை நிராகரித்தனர். இதனால் அந்த பெண், எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்கச் சென்றார், ஆனால் அங்கும் அவரது புகார் ஏற்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த பெண் எஸ்பி அலுவலகத்தில் விஷம் குடித்தார். போலீசார் விரைந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Tags :