சாதி மறுப்பு திருமணம் இளைஞர் படுகொலை
சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மி என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்து, பிரவீனை சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :