ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

by Staff / 29-02-2024 05:28:24pm
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்ததை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆலையில் செய்யப்பட்ட விதிமீறல்கள் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது; சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via