செய்தியாளர் அடைத்து வைக்கப்பட்டு தாக்குதல் - எல். முருகன் கண்டனம்

by Staff / 29-02-2024 05:31:32pm
செய்தியாளர் அடைத்து வைக்கப்பட்டு தாக்குதல் - எல். முருகன் கண்டனம்

சாமானியர் ஒருவரின் கருத்துச் சுதந்திரம் பற்றி, எதிர்க்கட்சியாக இருந்த பொழுது பக்கம் பக்கமாக பாடமெடுத்த ‘போலி திராவிட மாடல்’ அரசியல்வாதிகளே, போதைப் பொருள் கடத்துபவர்களை செய்தியாக்கச் சென்ற, செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது தான் கருத்துச் சுதந்திரமா என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் புற்றீசல் போல் போதைப் பொருள் வியாபாரிகளை ஒளித்து வைத்திருப்பது, செய்தியாளர்களை அறைகளில் பூட்டி வைத்து தாக்குவது தான், ‘போலி திராவிட மாடல்’ அரசாங்கத்தின் புதிய கொள்கையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via