நொய்டாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீவிபத்து

by Staff / 13-03-2024 11:35:49am
நொய்டாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீவிபத்து

உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சார் மூர்த்தி சௌக்கில் உள்ள தாபாவில் இந்த விபத்து நடந்துள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்துள்ளது. தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் மளமளவென பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்தில் கோடிக்கணக்கான் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via