இரண்டாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு 2025 ஜூன் மாதத்தில்

by Admin / 17-03-2024 05:12:38pm
இரண்டாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு 2025 ஜூன் மாதத்தில்

முதலாம் உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 2010 ஆம் ஆண்டு முதல் அமைச்சர் டாக்டர் கலைஞரால் கொடிசியா மைதானத்தில் தொடங்கப்பட்டது. இரண்டாவது மாநாடு குறித்து தகவலை தற்பொழுது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். வருகிற 2025 ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 இயற்றமிழ் இசை தமிழ் நாடகத் தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணினி தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி தொன்மை தனித்தன்மை பொதுமை பண்பு, பண்பாடு உயர்ந்த சிந்தனை இலக்கிய தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கேற்றத்துடன் செம்மொழி என்ற தனித்தொகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் ஆவார். வளம் பெற்ற நம் மொழிக்கு செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்து தமிழர்களின் நூற்றாண்டு கனவை நினைவாக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதி வாய்ந்த தமிழ் அறிஞர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்குவதோடு நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதும் பண்டைய தமிழர் பண்பாட்டையும் பழங்கால தமிழர்களின் எழுத்தறிவு நாகரிக வாழ்வு முறமைகளை  பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து அதன் தொடர்ச்சியாக பொருளை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ் பண்பாட்டின் மணிமகுடங்களாகும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நினைவாக்கும் வகையில் அறிவியல், இன்ஜினியரிங், மருத்துவம் ,தொழில்நுட்பம் ,வேளாண்மை மற்றும் பல்துறை சார்ந்த பாட நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினை செய்து வருவதும் செயற்கை நுண்ணறிவு போற்றும் வகையில் கணினி தமிழ் மாநாடு 24 நடத்தியதும் தாய் தமிழை உயிர் போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் திமுக அரசின் முயற்சிகள் ஆகும் மேலும் உலகங்களும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலாக தமிழர் தினமாக ஜனவரி 12ஆம் தேதியினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024 ஆம் ஆண்டு அயலகக தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும் பார் போற்றும் வகையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடத்தியதும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்குவதும் திருக்கோவில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச் சிறந்த பல்வேறு தமிழ் பணிகளை ஆற்றி வருகிறோம் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பார் பாவேந்தர் நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு 2025 ஜூன் மாதத்தில் 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனை செயலதுரத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 

 

Tags :

Share via