எம்.ஜி.ஆரே கட்சி தொடங்க பயந்தார் - சீமான்

by Staff / 03-11-2023 01:50:37pm
எம்.ஜி.ஆரே கட்சி தொடங்க பயந்தார் - சீமான்

திமுகவிலிருந்து வெளியே வந்த பிறகு எம்.ஜி.ஆரே கட்சி தொடங்க பயந்தார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், "பிரிந்து வந்த பின்னரும் மீண்டும் திமுகவுடனே இணைந்துவிடலாம் என்றெல்லாம் அவர் முயற்சி செய்தார். கருணாநிதி மட்டுமே இருந்ததால் வேறு வழியின்றி எதிர்ப்பதை தொடர்ந்தார். பின் மக்கள் செல்வாக்கில் ஆட்சியை பிடித்தார்" என்றார். விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குள் அரசியலுக்கு வந்துவிடுவார் என கூறப்படும் நிலையில், சீமான் இந்த கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via