ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏன் - ஓ.பி.எஸ்.

by Staff / 22-03-2024 03:04:39pm
ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏன்  - ஓ.பி.எஸ்.

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அங்குஅந்த தொகுதியை தேர்வு செய்தது குறித்து ஓ.பி.எஸ்  ராமநாதபுரம் தொகுதி சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி, தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது கடந்த கால வரலாறு..எனவே, நீதியை வழங்கும் மக்கள் வாழும் மண் ராமநாதபுரம் என்ற வகையில் அங்கு போட்டியிடுகிறேன்.. நீதிக்குப் புறம்பாக செயல்படுபவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன் என்று விளக்கமளித்துள்ளார் .

 

Tags :

Share via