மகன் கண்முன்னே தாய் விபத்தில் பலி

by Staff / 24-03-2024 02:11:39pm
மகன் கண்முன்னே தாய் விபத்தில் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள வாழவந்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவருடைய மனைவி சொர்ணம். நேற்று தனது தோட்டத்தில் விளைந்த நிலக்கடலையை விற்பனை செய்து விட்டு தனது மகன் முருகேசனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சொர்ணம் இருசக்கர வாகனத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த சொர்ணம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 

Tags :

Share via