அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு நியாயம் கேட்கும் அமெரிக்கா
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தனர். அதன் பின்னர் மார்ச் 28ஆம் தேதி (நாளை) வரை நீதிமன்றக் காவலில் இருக்க உத்தரவானது. கைது நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர்,“கெஜ்ரிவால் வழக்கு தொடர்பான விசாரணையை நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். சிறையில் உள்ள முதல் மந்திரிக்கு உரிய சட்ட உதவி கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Tags :