பிரச்சாரம் செய்த மன்சூர் அலிகான் மீது வழக்கு

by Staff / 30-03-2024 01:03:04pm
பிரச்சாரம் செய்த மன்சூர் அலிகான் மீது வழக்கு

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மளிகை தோப்பு பகுதியில் இன்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். முறையான அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக ஆம்பூர் நிர்வாக அலுவலர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via