தைவான் நிலநடுக்கம்: உயிர் பலி அதிகரிப்பு

by Staff / 03-04-2024 12:51:32pm
தைவான் நிலநடுக்கம்: உயிர் பலி அதிகரிப்பு

தைவான் தலைநகர் தைபேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது வரை நான்கு பேர் உயிரிழந்து இருப்பதாகவும், இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதால், அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருவதாகவும் தேசிய தீயணைப்பு மையம் தெரிவித்துள்ளது. தைவானில் இன்று மட்டும் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம் வெவ்வேறு ரிக்டர் அளவுகோலில் பதிவாகி இருக்கிறது.

 

Tags :

Share via

More stories