போலி மது பாட்டில்கள் பறிமுதல்

by Staff / 08-04-2024 11:44:21am
போலி மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி அரியமங்கலத்தின் பால்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே சொகுசு மதுபான பார் அமைந்துள்ளது. இங்கு போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சொகுசு மதுபான பாரில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய போலி மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via

More stories