பப்ஜி மதன் வழக்கில் குற்றப்பத்திரிக்கை: நீதிமன்றத்தில் தாக்கல்

by Editor / 12-08-2021 06:47:31pm
பப்ஜி மதன் வழக்கில் குற்றப்பத்திரிக்கை: நீதிமன்றத்தில் தாக்கல்

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கு கற்றுத்தருவது மற்றும் அவர்களுடன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பப்ஜி மதன், முறைகேடாக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும் அந்த பணத்தில் ஆடி கார் உள்பட பல ஆடம்பர செலவுகள் செய்ததாகவும் கூறப்பட்டது. 

இதனை அடுத்து பப்ஜி மதனை கைது செய்த போலீசார் அவருடைய வங்கிக் கணக்கை முடக்கினர் என்பதும் அவருடைய இரண்டு ஆடம்பர ஆடி காரை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதன் மட்டுமின்றி அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார் என்றும் ஆனால் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பப்ஜி மதன் குறித்த வழக்கை விசாரணை செய்து வந்த சைபர் க்ரைம் காவல்துறையினர் தற்போது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

 

Tags :

Share via