நாடே திரும்பிப் பார்க்கும் அதிமுக மாநாடு - பேருந்துகளை கொடி அசைத்து ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

by Staff / 19-08-2023 12:14:04pm
நாடே திரும்பிப் பார்க்கும்  அதிமுக மாநாடு - பேருந்துகளை கொடி அசைத்து  ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டில் பங்கேற்க இன்று சென்னை ராயபுரத்தில் இருந்து பேருந்துகளில் பயணம் செய்யும் தொண்டர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்திய திருநாடே திரும்பிப் பார்க்கின்ற வகையில் அதிமுக மாநாடு அமையும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்தது, கட்சி சிதறுண்டது, கட்சியே இல்லை என கூறியதற்கு பேரடியாக இந்த மாநாடு அமையும். மதுரை எழுச்சி மாநாடு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுகவின் இந்த மாநாடு போல கடந்த காலத்தில் யாரும் மாநாடு நடத்தியதில்லை. எதிர்காலத்திலும் யாரும் நடத்தப் போவதும் இல்லை”

 

Tags :

Share via