பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்

by Staff / 08-04-2024 05:28:40pm
பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் சௌத்ரி பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது அரசியல் பயணத்தை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தொடரப்போவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜகவின் அப்போதைய தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமாகப் போவதாய் அறிவித்துள்ளார் பிரேந்தர் சிங்.
பிரேந்தர் சிங்கின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜேந்தர் சிங் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via