சுற்றுலா வந்த 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff / 12-04-2024 11:19:09am
சுற்றுலா வந்த 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் ஹசாரா கால்வாயில் இன்று ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவுக்காக 8 இளைஞர்கள் ஹசாரா கால்வாய்க்கு வந்தனர். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது 8 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை காப்பாற்ற இறங்கிய உள்ளூர் இளைஞர் ஒருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதுவரை 4 பேரின் உடல்களை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

Tags :

Share via