அண்ணாமலை மீது குவியும் அடுத்தடுத்த புகார்கள்

by Staff / 13-04-2024 01:39:31pm
அண்ணாமலை மீது குவியும் அடுத்தடுத்த புகார்கள்

கோவையில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க .வேட்பாளர் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 10.45 மணியளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை மற்றும் பா.ஜ.கவினரை கேள்வி எழுப்பிய தி.மு.க கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மீது தேர்தல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo