தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

by Staff / 13-04-2024 02:02:44pm
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் கை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தின் பிரேமலதா திண்டுக்கல் என்றால் பூட்டு தொழில் நலிவடைந்துள்ளது. அந்தத் தொழிலை பாதுகாப்போம். சிறுமலை சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் பேருந்து நிலையம் புறநகர் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் நிச்சயமாக உருவாக்கிக் கொடுப்போம். கொடைக்கானலில் வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சின்னாளப்பட்டி சுங்குடி சேலை மிகவும் பிரபலம். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த விற்பனை மேம்படுத்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்படும் விவசாயத்தையும், நெசவுத் தொழிலையும் இரண்டு கண்களாக திண்டுக்கல்லில் கொண்டு வந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும்.திண்டுக்கல்லில் மாணவிகள் பயில மகளிர் கல்லூரி உள்ளது போல, மாணவர்கள் பயில்வதற்கான அரசு கல்லூரி கொண்டு வரப்படும். திண்டுக்கல்லில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விவசாயிகளுக்கு உரிய விலைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். சிறுகுரு தொழில் இவ்வளவு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலக அளவில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்.

 

Tags :

Share via